புல்லரிப்பு
இரவின் நீட்ச்சி
இமையத்தின் எல்லைவரை
களைகட்டுகின்றது.
சத்தியத்தினை வருகையை
உள்ளம்
யாசிக்கின்றது
போதையின்
தழும்பலில்
சத்தியம் தேடி
தலையணை
கண்ணீர் சரக்கின்றது
விடியற் காலையில்
விடியா
இரவகளைத் தேடி
உளக்குமுறல்
பாதையாத்திரை
கதிரவனின் ஒளியில்
எங்கோ ஒரு மூலையில்
சபதங்களின் அவலக்குரல்
காதுகளில் நச்சரிப்பு
கடலலையாய்
வயலைகள்
இருப்பினை அரித்து
திசை தெரியா
சருகுகளாய்
உளநடைகள்
இவையனைத்தும்
கலங்கரை விளக்காய்
மின்னி மின்னி மறையும்
சில ஒளிக்கீற்றுகளிடையே