Friday, July 1, 2011

அடியான்

நானோ
பாவங்களைச் சம்பாதித்து
மன்னிப்பாய்
என்ற நப்பாசையால்
பாவமீட்சியைத் தவிர்ந்த
அடியான்

அகிலதின்
ஆட்சியாளனே!!
ஒருவன் அவதானிக்கின்றான்
என்ற பயமற்ற
பட்டோலை எழுதப்பட்ட
அடியான்

கிருபையுடையவனே
இரகசியமாக பாவங்கள்
செய்த
பாவினான்

எனக்கு என்ன நிகழ்தது..........
துக்கத்தை
வெளியாக்காமல்
இருக்கின்றேனே........















கிருபையுடையவனே
வாழ்வை வீணடித்த
சிறியோரோ பெரியோரோ
மதியா
ஊதாரி நான்

அகிலத்தை காப்பவனே
கொந்தழிக்கும் கடலில்
விடைகிடைக்காதோ
என அலறியவனாய்
முழ்கின்றேன்

அருளாளனே
நானோ
பாவங்களினால் பீடிக்கப்பட்ட
நோயாளி
எனக்கே அநீதியிழைத்து
ஓட்டாண்டியாய் நிற்கின்றேன்

என் அருளாளனே
மறைவான தவறவறால்
கவலைகொண்டு
நம்பிகையிழந்து
பித்தனாய் கிறங்கி
நிற்கின்றேன்


என்னைப் படைத்தவனே!!
உன் வாயலின் பால்
திரும்பியவனாய் நிற்கின்றேன்
என்பாவங்களை முன்வைத்து
மன்றாடுகின்றேன்
என்னை மன்னிப்பாயாக!!!!!!!!!!
ஆமீன்.............





No comments:

Click Here To add Comment

Post a Comment

Blogger Widgets