Monday, July 4, 2011

எனது சிறிய உள்ளம்

இம் மண்ணில் பிறந்த போது
வெறுமையான
சிறிய உள்ளத்தை தந்தாய்
உன் மீதான தூய்மையான
காதலில் மூழ்கடித்தேன்

நீதான் என் காதலன்
நீதான் என் உரிமையாளன்

என் உள்ளத்திலோ
உன்மீதான காதல்
பிரவாகிக்கின்றது

உன்
நெருக்கமே என் சந்தோசம்
உன் திருப்தியே
என் விருப்பம்
இவற்றையே
நான் வேண்டுகின்றேன்

உன் ஞாபகத்திலே
என் உள்ளம்
சாந்தியடைகின்றது
என் உயர்வான
ஆட்சியாளனே

நான்
உன்னையே அழைக்கின்றேன்....
உன்னையே புகழ்கின்றேன்...........
உன் கிருபையினையே
யாசிக்கின்றேன்..........

என்னை
நேர்வழிப்படுத்தியதற்காய்
உன்னை புகழ்கின்றேன்

என் உள்ளமோ
உன் ஞாபகத்தால்
அச்சமடைகின்றது

உன்
வார்த்தைகளை உணர்ந்து
அடிபணிவதற்காள்
எனது உள்ளத்தை
இச்தீரப்படுத்துவாயாக
ஆமீன்!!!!!!!.............








No comments:

Click Here To add Comment

Post a Comment

Blogger Widgets