பிரிவின் பின்
எனக்காக
வீடு திரும்புவாய்
என்ற நப்பாசையில்
பலகோடிகளில்
ஒண்டியாய்
ஓடிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் போல்
சூரியன், காற்றை
நேசிக்கும்
மலைச்சிகரத்தின்
ஒற்றை மரமானேன்
என் வளர்ச்சி
மற்றோருக்கு நிழலாகலாம்
பறவைக்கான
துயிலாகம்
உணவுப்பொட்டலமாகலாம்
மன்றாடுகின்றேன்
என்னால் முன் விழைந்த
அனைத்திற்ககவும்
எனது
இலைகளாலான
கிளைகளை
இறக்கை போல்
விரித்தவனாக
ஆ
ஒவ்வொரு கனப்பொழுதிலும்
காற்றுடன் கலந்த
எனதான உணர்வுடன்
உன்னைத் தொலைத்துவிட்டேனே
உன் வரவுக்காய்
என் விழிகளோ
உன்நத் பாதையே
சகியென
விரதம்கொண்டன
நீ
இல்லாமல்
காற்று எதற்காக
அதைக் காலியாக்கிவிடுங்கள்
காலியாக்கிவிடுங்கள்!!!!
No comments:
Click Here To add Comment
Post a Comment
Blogger Widgets