மறதியை
உன்
விருப்பின் படியே
செய்துகொள்
மலர்ப் பூங்கா
ஒருபோதும்
எம்மை ஞாபகப்படுத்தாது
உன்
கண்களோ
கண்களோ
இகழப்பட்ட
சுத்தமான
தேனின் சுவையை
உறுஞ்சுகின்றன
ஒளிபுகா
நீல இரத்தினம்
அதன் கரையைவிட்டு
ஒருபோதும் நீங்காது
உன்னை
ஒட்டிக் கொண்டிருப்பதோ
வஞ்ககம் செய்கின்றது
பேரலை போன்ற
அந்த வெட்கத்தினை
துறந்துவிடு
கடினமான
சக்திமிக்க
அந்தக் குன்றை
துவள் துவளாக நொறிக்கிவிடு
பூக்கள் இங்கே
இருக்கும் காலமெல்லாம்
காத்திரு
நீ
எனது மெல்லிய
கனவுகளை
கண்டுகொள்ளவில்லை
மெல்லத் தூறும்
துக்கமான மழை
எதிர்பார்பவர்களின்
எதிர்பார்பினை
நிறைவேற்றுவதில்லை
நெருப்புப் பிழம்பையுடைய
வேட்கைகொண்ட குதிரை
அதன் தங்குமிடத்தை
விட்டு விரண்டால்
சிறிய தடியால்
எவ்வாறு
இருப்பிடத்தை
அடையச்செய்வது
அன்புன்தான்
No comments:
Click Here To add Comment
Post a Comment
Blogger Widgets